Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (14:17 IST)
திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
செஞ்சியை அடுத்துள்ள சேத்துப்பட்டு பழம்பேட்டையை சேர்ந்த விவசாயி வேலு. இவரது மகன் சுரேஷ். இதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசியதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் சுரேஷ் அந்த மாணவியிடம், சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திந்து பேசியதாகக் கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் சுரேஷ் அந்த மாணயை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
 
அங்கு பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரியா, தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
 
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுரேஷிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.
 
இது குறித்து சேத்துப்பட்டு காவ்லதுறைனரிடம்  பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். 
 
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!