10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Mahendran
சனி, 25 அக்டோபர் 2025 (12:14 IST)
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு அட்டவணை வெளியிடப்படவுள்ளது.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  அன்பில் மகேஷ், நவம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தேர்வு அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டு, அன்றைய தினமே இறுதி அட்டவணை வெளியாகும் என்று உறுதிப்படுத்தினார்.
 
மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதை எளிதாக்கும் வகையில் இந்த அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-2026) அட்டவணை தயாரிப்பு பணிகள் முடிவடைந்து அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டே தேர்வு தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments