Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது: ஒரே வாரத்தில் சாதித்து காட்டிய தமிழக போலீஸ்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (07:29 IST)
சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் கடந்த வாரம் நடந்த நிலையில், கொள்ளையர் தலைவன் உள்பட 4 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஹரியானாவை சேர்ந்த அமீர், வீரேந்திர சிங், நசீர் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஹரியானாவில் கொள்ளையர் தலைவன் சவுகத் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர் தலைவனை இன்று தமிழக போலீசார் சென்னைக்கு அழைத்து வருவதாகவும் நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
கொள்ளையர் தலைவனிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஏற்கனவே கைவரிசை காட்டி இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால் நான்கு மாநில போலீசாரிடம் பிடிபடாத இந்தக் கொள்ளையர்கள் தமிழக போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
இந்த கொள்ளையில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்றும் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை அனைவரையும் கூண்டோடு பிடிக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments