Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜியை பகைத்த சாத்தூர் எம்.எல்.ஏ! – சீட் கிடைக்காததால் அமமுகவுடன் பேச்சுவார்த்தை!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (11:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சாத்தூர் எம்.எல்.ஏவாக உள்ள ராஜவர்மனுக்கு தொகுதி வழங்கப்படவில்லை. முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வெற்றிபெற விட மாட்டேன் என ராஜவர்மன் பேசியிருந்த நிலையில் அவருக்கு தொகுதி வழங்காததற்கு ராஜேந்திரபாலாஜியின் அழுத்தம் காரணம் என அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தனக்கு சீட் வழங்கப்படாத நிலையில் ராஜவர்மன் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று சந்தித்துள்ளார். எனவே ராஜவர்மன் அமமுகவிற்கு கட்சி மாறுவாரா? அமமுக சார்பில் சாத்தூரில் போட்டியிடுவாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments