Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தனூர் அணையில் 1000 கன அடி நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (14:59 IST)
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆற்றின் கரையோரங்களில் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 117 அடியை நெருங்கிய நிலையில், மின் உற்பத்தி தடம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது சாத்தனூர் அணையில் அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருவதை அடுத்து நீர்நிலைகள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments