Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை காப்பாற்ற முடியாத சசிகலா கட்சியை எப்படி காப்பாற்றுவார்? - தீபன் அதிரடி

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (11:36 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதவர்கள், எப்படி கட்சியை காப்பாற்றுவார்கள் என ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகன் தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
முதல் மரியாதை படத்தில் ரஞ்சனிக்கு ஜோடியாக நடித்திருந்த தீபனை யாரும் அவ்வளவு எளிதாக  மறந்திருக்க முடியாது. இவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தம்பி மகன் ஆவார். எம்.ஜி.ஆர் மறைந்த போது, அவரது உடலை சுமந்து சென்ற ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை கீழே  தள்ளியது இவர்தான்.
 
இந்நிலையில், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:


 

 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வந்ததில் மக்களுக்கு உடன்பாடு இல்லை. கட்சியிலும் அவரை நிறைய பேருக்கு பிடிக்கவில்லை. கட்சிக்குள் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவும், இரட்டை இலை சின்னம் கை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும் அதிமுகவினர் அமைதியாக இருக்கிறார்கள்.
 
தனது சொந்த தேவைக்காக ஜெயலலிதாவை சசிகலா பயன்படுத்திக் கொண்டார். அவரின் உயிரை காப்பாற்ற முடியாத சசிகலா எப்படி கட்சியை காப்பாற்றுவார்?. தனது சுயநலம் காரணமாகத்தான் 75 நாட்கள் வரை அவரை யார் கண்ணிலும் காட்டாமல் வைத்திருந்தார் சசிகலா” என அவர் குற்றம் சுமத்தினார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments