Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (14:53 IST)
அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் கட்சியினரிடையே உரையாற்றினார் சசிகலா.


 
 
சசிகலாவின் முதல் உரை இதுதான். இதுவரை மறைமுகமாக அரசியலில் இருந்த சசிகலா தற்போது நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். ஜெயலலிதா வகித்து வந்த அதிகாரமிக்க கட்சி பதவியான பொதுச்செயலாளர் பதவியை அவரது மறைவிற்கு பின்னர் ஒரு வழியாக அடைந்துவிட்டார் சசிகலா.
 
இன்று பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றி சசிகலா தன்னுடைய உரையை முடித்துவிட்டு திரும்பும் போது அவரது காலில் தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் விழுந்தார்.
 
முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து மற்ற மூத்த தலைவர்களும் சசிகலாவின் காலில் விழு தயாராக இருந்தனர். ஆனால் சசிகலா பன்னீர்செல்வம் காலில் விழுந்ததும் இப்படி காலில் விழ வேண்டாம் என அதனை தடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments