Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ எம்பியா? நோ நெவர்... பாஜகவுக்கு வக்காலத்து வாங்கும் சசிகலா புஷ்பா!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (15:07 IST)
பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வரும் வைகோவிற்கு எம்பி-யாக பதவி பிரமாணம் செய்ய கூடாது என சசிகலா புஷ்பா மனு ஒன்றை அளித்துள்ளார். 
 
2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் விரைவில் எம்பி-யாக பதவியேற்க உள்ள வைகோவிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சசிகலா புஷ்பா ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரும், பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இதற்கு முன்னரும் சசிகலா புஷ்பா பாஜகவுக்கு ஆதரவக பேசிய நிலையில் இப்போது மீண்டும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வைகோவை எதிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லையில் 17 வயது இளைஞர், 15 வயது சிறுமி பிணம்.. பாகிஸ்தான் சிம்கார்டு, அடையாள அட்டை..!

எம்ஜிஆரையே பார்த்த கட்சி திமுக.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் நேரு..!

300 பவுன் நகை.. 2 கோடி செலவில் திருமணம்! 2 மாதத்தில் மணப்பெண் தற்கொலை! - திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

முன்னாள் காங். எம்எல்ஏவுக்கு ரூ.557 கோடி சொத்துகள்.. அமலாக்கத்துறை முடக்கியதால் பரபரப்பு..!

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments