Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோலில் இன்று வர வாய்ப்பு!

கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோலில் இன்று வர வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (09:18 IST)
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் சிட்டி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 
 
அந்த அறிக்கையில் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாகவும், கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் அவரது கல்லீரல் தற்போது மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் ஆகியவை உள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் சசிகலாவை பரோலில் வெளியே எடுக்க அவரது குடும்பம் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் சசிகலா சார்பில் தனது கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது தசரா விடுமுறை முடிந்துள்ளதால் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

பிரியாணி சாப்பிட்ட பெண் பலி.! 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments