Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் சசிகலாவுக்கு வேலை ரெடி: சம்பளம் தினமும் ரூ.50

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (15:42 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளார் சசிகலா. இவருடன் இளவரசியும் சென்றுள்ளார். சுதாகரன் தனியாக பெங்களூர் சென்றுள்ளார்.


 

பொதுவாக தண்டனை கைதிகளுக்கு சிறைச்சாலையில் ஏதாவது வேலை ஒன்று வழங்கப்படும். அதற்கு ஊதியமும் சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். ஆனால் இந்த ஊதியத்தை உடனடியாக பெற முடியாது. தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது வழங்கப்படும்.

இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு பெண்கள் செய்யக்கூடிய வகையில் ஊதுபத்தி உருட்டுவது உட்பட 3 வகை வேலைகள் மாறி மாறி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக தினசரி ரூ. 50 ஊதியம் கொடுக்கப்படும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையும் வழங்கப்படும் என தெரிகிறது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments