Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயத்தில் சசிகலா? எம்.எல்.ஏ.க்களுடன் நேரில் சந்திப்பு

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (17:02 IST)
இதுவரை எம்.எல்.ஏ.க்கள் தான் தலைமையை தேடிச் சென்று பார்த்து வந்தனர். ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூர் நட்சத்திர விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தேடிச் சென்று பார்த்து வருகிறார். 


 

 
முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலா எதிராக திரும்பும் வரை கட்சியின் தலைமையாக இருந்த சசிகலாவை அனைவரும் தேடிச் சென்று பார்த்து வந்தனர். பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு திரும்பியதை அடுத்து அதிமுக மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்துள்ளனர். 
 
பொன்னையன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஓ.பி.எஸ்.க்கு 7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பலர் ஓ.பி.எஸ்.க்கு அதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து இரண்டாவது நாளாக தேடிச் சென்று பார்த்து வருகிறார்.
 
இந்த சூழல், சசிகலா பயத்தில் உள்ளதால் எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அவர்களை வெளியே விட்டால் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக சென்றுவிடுவார்கள் என சசிகலா பயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments