Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவறைக்குள் நுழைந்த சசிகலா: வெடிக்கும் சர்ச்சை!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (08:05 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்தார். சசிகலாவை கோயில் கருவறைக்குள் சென்று வழிபட அனுமதித்த நிர்வாகம் அனைத்து தரப்பினரையும் அனுமதிக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


 
 
கடந்த ஆடிவெள்ளிக்கிழமையன்று சசிகலா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த அவரை ஆண்டாள் கோயிலுக்கு அழைத்து சென்றார் அறங்காவலர் குழுத் தலைவர்.
 
பின்னர் அவரை அறங்காவலர் குழுத்தலைவர் ரவிச்சந்திரன் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்று சாமி கும்பிட வைத்தார் என செய்திகள் வந்தன. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
 
சசிகலாவை கருவறைக்குள் சென்று வழிபட அனுமதித்த நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களையும் கருவறைக்குள் நுழைய அனுமதிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments