Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலே வரல.. அதுக்குள்ள தன்னை முதல்வராவே நினைச்சிக்கிட்டார்! – ஸ்டாலின் குறித்து சரத்குமார் கருத்து!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (12:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேசிய சரத்குமார், ஸ்டாலின் முதல்வராகவே நினைத்துக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பிஸியாகி உள்ளன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவரிடம் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கப்பட்டபோது “தேர்தல் வருவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் தன்னை முதல்வராகவே கருதி செயல்பட்டு வருகிறார். திமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சேர வாய்ப்பே இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments