Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதள காதல்; கணவனை கொன்று நாடகம்! – சேலத்தில் இளம்பெண் கைது!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:29 IST)
சேலத்தில் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலால் கணவனையே இளம்பெண் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினரான பிரபு என்பவருடன் திருமணம் ஆன நிலையில் ஒன்றரை வயது வயதில் குழந்தை ஒன்று உள்ளது. ஷாலினி விருப்பமின்றி பிரபுவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளம் மூலமாக ஷாலினிக்கு திருச்சியை சேர்ந்த காமராஜ் என்பவர் பழக்கமாகி இருவருக்கும் காதலானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளத்தை ஷாலினி பயன்படுத்துவதை பிரபு கண்டித்ததாகவும் இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு பிரபு தூங்கி கொண்டிருக்கையில் தலையணையை வைத்து அமுக்கி கொன்ற ஷாலினி, உறவினர்களிடம் திருடர்கள் சிலர் பிரபுவை கொன்று விட்டதாக முன்னுக்கு பின் உளறியுள்ளார்.

இதுகுறித்து பிரபு பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்தபோது ஷாலினி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார், அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் திருச்சியை சேர்ந்த காமராஜையும் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments