Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைப்பு..!

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (13:39 IST)
சென்னை, தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் 350 பக்க ஆவணங்களை சிபிசிஐடி வசம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்ததாகவும், கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. எனவே இனிமேல் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்யும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
 
முன்னதாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த ஆறாம் தேதி இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விவகாரத்தில் சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலருக்கு விளக்கம் அளித்த தவெக தலைவர் விஜய்..!

தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் இவர்கள் தான்.. விஜய் அறிவிப்பு..!

தவெக மாநாடு: பெரியார் வேணும்.. கடவுள் மறுப்பு வேணாம்! - பெரியார் கொள்கை குறித்து விஜய் பேச்சு!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் எதனால்? விஜய் பேச்சு

மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments