Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் - ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம்!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (14:43 IST)
போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தின் அட்டைகள் வழங்கப்படும்.


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 13 மருத்துவமனையில் ரூ. 2 லட்சம் வரை அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments