Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டிராஃபிக் ரோபோ – குறையுமா போக்குவரத்து நெரிசல் ?

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (10:54 IST)
சென்னையில் அதிகமாகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய வகை ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் சாலைகளை விரிவாக்கினாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அதுவும் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8 முதல் 10 மணி மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளிக் கல்லூரி செல்வோருக்குப் பெரும் இடைஞ்சலாக போக்குவரத்து நெரிசல்கள் இருந்து வருகின்றன.

இதற்காக இப்போது சென்னையில் புதிதாக டிராபிக் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ROADEO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிராஃபிக் ரோபோவை நேற்று  சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தினார். இந்த ரோபோ சாலைப் போக்குவரத்துகளை சீரமைத்தல் மற்றும் மாணவர்கள், வயதானவர்களுக்கு சாலையைக் கடக்க உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட டிராபிக் போலிஸ் போலவே இந்த ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ள வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. நெரிசல் நேரங்களில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி பாதச்சரிகளை நடைபாதையைக் கடக்க உதவி செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மானிட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ப்ளூடுத் மூலமாகவும் இயக்க முடியும். இந்த ரோபோவின் செயல்பாட்டைப் பொறுத்து மேலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments