Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1.46 லட்சம் திருட்டு

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (18:30 IST)
கரூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து சுமார் ரூ 1.46 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 


 

 
கரூர் அருகே சுக்காலியூர் பகுதியை அடுத்த வதியம் பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் யாரோ  கதவின் முன்புறம் உள்ள கிரில் கம்பியை உடைத்தும், ஷட்டர் கதவினை உடைத்தும் உள்ளே புகுந்தனர்.
 
கடையில் இருந்த குவார்ட்டர் பாட்டில்கள் 1055, ஆப் எனப்படும் அரை பாட்டில்கள் 218 பாட்டில்கள், புல் என்ற முழு பாட்டில்கள் 7 மற்றும் பீர் 7 பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 330 ஆகும்.
 
இந்த கொள்ளை சம்பவத்தையடுத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சசிக்குமார் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீஸார் மதுபான திருடனை வலைவீசி தேடி வருகின்றனர். 


 

 
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் பாட்டில்கள் ஏராளமானவைகள் திருடப்பட்டிருப்பதால் திருட்டு சம்பவத்தில் ஒருவர் ஈடுபட்டிருக்க முடியாது என்றும், பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
 
டாஸ்மாக் கடையில் பணம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தும் இந்த நூதன திருடர்கள் சரக்கை மட்டுமே குறிவைத்து தாக்கியுள்ளதும் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments