Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ அதிகாரி வீட்டிலேயே 40 சவரன் நகை கொள்ளை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (14:11 IST)
இராணுவ அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனதாக அடுத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
இராஜபாளையம் பொன்னகரம் கே.ஆர்.நகர் பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலாவதி மற்றும் குடும்பத்தினருடன் திங்களன்று மதுரைக்கு உறவினர்கள் வீட்டிற்குச் சென்று விட்டார்களாம்.
 
இந்நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
 
திருடர்கள் செல்லும் போது வீட்டின் உள்அறையில் உடைக்கப்பட்ட பூட்டிற்கு பதிலாக புதிய பூட்டினை போட்டு விட்டு சென்று விட்டதாகவும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்ற தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments