Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 2ஆவது இடத்தைப் பிடித்த ஜெயலிலதா

Webdunia
சனி, 20 ஜூன் 2015 (03:21 IST)
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான
மின்னணு எந்திரங்களில், வேட்பாளரின் புகைப்படத்துடன், பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட பட்டியல் வரிசையில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா  2 ஆவது இடம் பிடித்துள்ளார்.
 
சென்னை, புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு, வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், தேர்தல் பார்வையாளர் ஜோதி கலாஷ், மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான விக்ரம் கபூர், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் ஆகியோர் முன்னிலையில், வேட்பாளர்கள் புகைப்படத்துடன் கூடிய சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணியை தேர்தல் ஊழியர்கள் செய்தனர்.
 
பின்பு, 460 வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களிலும் வேட்பாளரின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மின்னல் வேகத்தில் நிறைவு செய்தனர்.
 
இந்த மின்னணு எந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்ட பட்டியல் வரிசையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் புகைப்படமும், பெயரும், சின்னமும் 2 ஆவது வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments