Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (17:25 IST)
இடைதேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தேர்தலில் பிரச்சாரம் முடிவிற்கு வந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, வாக்காளர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.


 
வருகிற 21ம் தேதி ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அதன்படி இன்று மாலை 5 மணியோடு ஆர்.கே.நகரை சாராதவர்கள் அனைவரும் அத்தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதையடுத்து, பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின், மதுசூதனன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களின் பிரச்சாரம் முடிவிற்கு வந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணைய உத்தரவு படி, ஆர்.கே.நகரில் வாக்காளோர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் ஆணையம் பல கெடுபிடிகளை விதித்துள்ளது.
 
ஊடகசான்று, கண்காணிப்பு குழு அனுமதியின்றி வலைத்தளங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அந்த செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
 
வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இன்று மாலையிலிருந்து தேர்தல் நடைபெறும் 21ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்புற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்.கே.நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 5 மணியிலிருந்து வருகிற 21ம் தேதி வரை மூடவேண்டும் எனவும், தேர்தல் முடிவு வெளியாகும் 24ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments