Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்ல ரூ.20,000.. ஓய்வு பெற்ற நர்ஸ் கைது..!

Siva
வெள்ளி, 8 மார்ச் 2024 (12:34 IST)
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடித்து சொல்வது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ. 20,000 பெற்று கருவில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை சட்டவிரோதமாக கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ்  கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்ப்பிணி பெண்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சட்டவிரோதமான முறையில் தெரிவித்து இதற்காக அவர் இருபதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக இதை செய்து வரும் காந்திமதி சில சமயம் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்த நிலையில் மருத்துவ அதிகாரிகள் அதிரடியாக வீட்டில் சோதனை செய்தபோது உண்மை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கையும் களவுமாக பிடிபட்ட நர்ஸ் காந்திமதியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments