Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்- முதல்வர் முக ஸ்டாலின்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:49 IST)
நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம்  மோகனூர் வட்டம் மேட்டுத்தெரு பகுதியில் இன்று அதிகாலை வேளையில், அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில், தில்லைக்குமார், பிரியா, செல்வி, பெரிக்காள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் முக. ஸ்டாலின்  இரங்கல் மற்றும் ஆறுதல் கூறியதுடன், இவ்விபத்தில்  உயிரிழந்தவருக்கு தலா 2 லட்சம்  காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments