Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொன்ற கணவனை அடித்து நொறுக்கிய உறவினர்கள்...

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (17:06 IST)
சேலம் மாவட்டத்தில் தன்னுடன் வந்து வாழ மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவனை உறவினர்களே பலமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வீராணம் பள்ளிப்பட்டியில் வசித்து வந்தவர் மாதேஷ் . இவரது மனைவி பெயர் செல்வி. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தன் தாயின் வீட்டிற்குச் சென்றார்.
 
ஆனால் குழந்தை பிறந்த பின்னும் கணவருடைய வீட்டிற்கு  செல்லவில்லை என்று தெரிகிறது. அதனையடுத்து நேற்று இரவு வேளையில் தன்னுடைய மாமனார் வீட்டிற்குச் சென்ற மாதேஷ், தன் மனைவியை தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். ஆனால் செல்வி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் வீட்டில் எல்லோரும் இருக்கும் சமயத்தில் தன் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். அதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் மாதேஷை அடித்து நொறுக்கினர். 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மாதேஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments