Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 ஆவது நாளாக வேலை நிறுத்தம்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2015 (11:58 IST)
இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 ஆவது நாளாக வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும்.
 
இலங்கை கடற்கரையில் உள்ள சேதமடைந்த தமிழக விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த வேலை நிறுத்தத்தில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments