Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு: திருமாவளவன்

ராமதாஸ் மீது அவதூறு வழக்கு: திருமாவளவன்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (22:18 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
 

 
சென்னை, பாரிமுனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்.
 
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே,  இந்தக் கூட்டணியை வலுப்படுத்த முயற்சி செய்துவருகிறோம்.
 
எங்கள் கூட்டணிக்கு, தேமுதிக மற்றும் தமாகா ஆகிய கட்சிகள் வரும் என எதிர்பார்கிறோம். அவர்களடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்கிறோம்.
 
மேலும், மரக்காணம் கலவரத்தில் தண்டனை பெற்ற 6 பேரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ராமதாஸ் அவதூறு பரப்புகிறார். எனவே, அவர் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளோம் என்றார். 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments