Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரா வர முடியாது.. வீடியோ காலில் வறேன்! – தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் ரஜினி!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:16 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் காணொலியில் ஆஜராக நடிகர் ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு விசாரணை செய்து வருகிறது. 24ம் கட்ட விசாரணை தொடங்கப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி அந்த சமயம் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்தை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் தனது உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த விசாரணையில் காணொலி மூலம் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments