Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடு! ரஜினி கட்சியில் குழப்பம்!? – பொறுப்பாளர்களுக்கு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியில் மன்ற நிர்வாகிகளின் மீதுள்ள புகார்களை கண்காணிக்க ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், இப்போதே பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒரே சமயத்தில் ரஜினி கட்சியினர் மேற்கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாக மன்ற நிர்வாகிகள் சிலரே புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ரஜினிகாந்த் தனது புதிய பொறுப்பாளர்களான அர்ஜூன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனிடம் நிர்வாகிகள் மீதான புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய அறிவுறுத்தியுள்ளாராம். அவர்கள் விசாரித்து நிலவரத்தை சொன்ன பிறகு மேற்கொண்டு ரஜினிகாந்த் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments