சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறாரா ரஜினி? – நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (09:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகள் கூட பெரிய கட்சிகளுடன் கூட்டணி, தேர்தல் பரப்புரை ஆகியவற்றிற்கு தயாராகி வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் வருகை தள்ளிக் கொண்டே போகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலன் காரணமாகவும், கொரோனா காரணமாகவும் அவர் கட்சி தொடங்கும் பணிகள் தாமதமாகி இருப்பதாக தெரிகிறது. இதனால் ரஜினி கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்ற கேள்வி அவரது தொண்டர்களுக்கே எழுந்துள்ள நிலையில் நாளை தனது மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments