Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ரஜினி காந்த் ஆதரவு - வேல்முருகன் விமர்சனம்

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:13 IST)
கருப்பு பணத்தை காப்பற்றவே நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது :மத்திய அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிட வேண்டும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சி அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.
 
மேலும் ,  காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார்.  தான் நடிக்கும் படங்களில் வாங்கிவரும் பெரும் கருப்பு பணத்தை குறித்து கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் மத்திய - மாநில அரசுகளுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல்  கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரஜியின் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments