Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங்! - மகிழ்ச்சியில் திமுகவினர்!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (19:46 IST)

இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார்.

 

 

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி அச்சடிக்கப்பட்ட புதிய 100 ரூபாய் நாணயம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார். சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். அதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments