Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி அடைய விரும்பவில்லை: ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகள்

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (15:16 IST)
பெயருக்கு கட்சி ஆரம்பித்து விட்டு தோல்வி அடைய விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகள் ஊடகங்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவது, வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது பெயருக்கு கட்சி தொடங்கி 10 முதல் 15 சதவீத வாக்குகளை வாங்கி தோல்வி அடைய விரும்பவில்லை என ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிவித்தார் 
 
தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் நிர்வாகிகளிடையே கூறியதாகவும் அவர் தெரிவித்தார். எனவே நமக்கு வெற்றி வாய்ப்பு உண்மையாகவே உள்ளது என்பது தெரிந்தால் மட்டுமே அரசியல் கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்