Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க அரசியல் டிராமா - ரஜினியை விளாசும் ரசிகர்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (12:24 IST)
ரசிகர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார் என நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி புலம்பல். 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் உறுதிபட கூறி விட்டார். இருப்பினும் அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் செய்தியை பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து இவ்வாறு வதந்தியை பரப்பிய ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகளை ரஜினி மக்கள் மன்ற அதிரடியாக நீக்கியுள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
ரஜினி என்னை மட்டும் ஏமாற்றவில்லை, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க அவர் காட்டிய தந்திரம் தான் அரசியல் கட்சி துவக்கம். கல்லா கட்டுவதில்தான் அவர் குறியாக இருந்தார். பொய்யாக மருத்துவமனையில் படுத்துக்கொண்டார் என கடுமையாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments