Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயமா? எனக்கா? ஜெ.வை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தேன் - ரஜினி அதிரடி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (11:21 IST)
ஜெயலலிதா மீது கொண்ட பயம் காரணமாகத்தான் இத்தனை வருடங்களாக அரசியலுக்கு வரவில்லை என்ற விமர்சனத்திற்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சந்திப்பு, மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
 
அந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற கேள்வி பலராலும், குறிப்பாக அதிமுகவினரால் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில்தான், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை ரஜினிகாந்த் நேற்று மாலை திறந்து வைத்தார். அப்போது, இதுபற்றி பேசிய ரஜினிகாந்த்,  ஜெ. இருக்கும் போது நான் ஏன் வரவில்லை? பயமா எனக் கேட்கிறார்கள். 1996ம் ஆண்டு என்ன நடந்தது என மீண்டும் நான் நினைவு படுத்த விரும்பவில்லை. அப்போதே ஜெ.வை எதிர்த்து நான் குரல் கொடுத்தேன். எனக்கு யார் மீதும் பயமில்லை எனக் கூறினார். இதன் மூலம் இந்த விவகாரத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments