Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, பிரபுதேவா வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (17:14 IST)
காவிரி விவகாரம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திலும் கன்னடர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நடிகர்கள் ரஜினி, பிரபுதேவா மற்றும் கன்னட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


 


 
காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலவரம் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல, தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் முன்னெச்சரிக்கை பாதுக்காப்புக்காக தமிழகத்தில் கன்னடம் பேசும் நடிகர்கள் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறியதாவது:-
 
தமிழகத்தில் கன்னடர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் கன்னட நடிகர்கள் வீடுகள், உணவங்கள், வங்கிகள், கடைகள், பள்ளிகள், விடுதிகள் என அனைத்திற்கும் பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா மற்றும் கன்னட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments