Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் மனு நிராகரிப்பு விவகாரத்தில் நடந்தது என்ன? லக்கானி விளக்கம்

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:07 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. விஷாலை முன்மொழிந்த இரண்டு நபர்கள், தாங்கள் முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்று கூறியதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தார்
 
இதுகுறித்து விஷால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் விஷால் மனு நிராகரிப்பு விவகாரத்தில் தேர்தல் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தனித்தனியாக தீபன், சுமதி ஆகிய இருவரிடமும் விசாரணை செய்யப்பட்டதாகவும், அதில் யாரும் மிரட்டவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும், அது வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்த நிலையில் கவர்னர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கவிருப்பதாக கூறிய விஷால் தற்போது அமைதியாக இருப்பதால் இந்த பிரச்சனை முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments