Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜதந்திரி; தலைமை மாற்றத்துக்கு வாய்ப்பே இல்லை..! ராஜன் செல்லப்பா

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (11:07 IST)
எடப்பாடி பழனிச்சாமி ஒரு ராஜதந்திரி என்றும் அவரது தலைமை மாற வாய்ப்பே இல்லை என்றும் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் 
 
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமை கேள்விக்குறியாகும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த கேள்வி ஒன்று ராஜன் செல்லப்பா பதில் அளித்தார்
 
 நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார் 
 
வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுக கூறுகிறதே என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக இருக்கிறார் என்றும் அவர் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரி என்றும், அதிமுகவை காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் அவரை தலைமையில் இருந்து மாற்ற வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார் 
 
அதிமுகவை காப்பாற்றுவதற்காகவே எடப்பாடி பழனிச்சாமி தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டுள்ளார் என்றும் ஜெயலலிதா போலவே அதிமுகவைக்காக பணியாற்றி வருகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் கொடுத்தார்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments