Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரத்தில் 3 மணி நேரம் கனமழை.. கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (07:44 IST)
ராமேஸ்வரத்தில் நேற்று இரவு 3 மணி நேரம் கன மழை பெய்ததை அடுத்து ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுத்து விட்டதாகவும் இதனால் பக்தர்கள் கடும் அவதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் கன மழை பெய்ததாகவும் 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுத்து விட்டதாகவும் அந்த மழை நீரை வெளியேற்ற கோவில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மழை நீர் கோவிலுக்குள் புகுந்து விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

மக்களுக்கு ஷாக் நியூஸ் - “சென்னையில் மீண்டும் உயரும் சொத்து வரி”..!

சீனாவின் இந்த ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகள் பதற்றமடைவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments