Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 31 மே 2021 (08:21 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மற்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம், தியாகராய நகர், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்து. மேலும் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததல், ஒருசில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. நள்ளிரவில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
 
சென்னை மட்டுமின்றி நேற்று வேலூர் மாவட்டத்திலும் பலத்த காற்று இடியுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக குடியாத்தம் பகுதியில் கடும் வெயிலால் அனல் காற்று வீசி வந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments