அடுத்த சில மணி நேரங்களில் 6 மாவட்டங்களில் மழை! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
திங்கள், 29 ஜூலை 2024 (09:33 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பெய்த மழையால் அப்பகுதியில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 

இந்நிலையில் இன்று 6 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments