Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (16:58 IST)
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் தமிழகத்தில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் சாலைகளில் போக்குவரத்து குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments