Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:10 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 காற்றின் வேகத் திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடலூர், நாகை, திருவாரூர், நெல்லை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி  ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே டிசம்பர் 31ஆம் தேதி வரை சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments