Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 19 ஜூலை 2024 (07:16 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒரு பக்கம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, இன்னொரு பக்கம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்றும் அதேபோல் புதுச்சேரி பகுதியிலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments