Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (14:23 IST)
இன்று மாலை சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை அடுத்து தட்பவெப்ப நிலை மாறி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை ,  செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும், தமிழகத்தின் சில இடங்களிலும் பு இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments