இன்று தமிழகம் முழுவதும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (09:02 IST)

வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே பல பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி. தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments