நள்ளிரவில் அமலுக்கு வந்த ரயில் கட்டண உயர்வு..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (09:15 IST)
புத்தாண்டின் நள்ளிரவில் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

புத்தாண்டு முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்திடுந்த நிலையில் நள்ளிரவு அமலுக்கு வந்தது. அதன் படி சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விரைவு ரயிலில் சாதாரண வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், குளிர்சாதன வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவிரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னமே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கும், கட்டண உயர்வு பொருந்தாது எனவும், புறநகர் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயப்படமா எழுதுங்க!.. 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து....

தொகுதி பங்கீட்டில் இழுபறி!.. இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி...

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments