Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டை பார்க்க வரும் ராகுல் காந்தி! – ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:18 IST)
பொங்கல் நாட்களில் பிரபலமாக தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

பொங்கல் திருநாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா பாதிப்புகள் இருப்பதால் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் மிகவும் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் அன்று நடைபெற உள்ளது. வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வெளிநாடுகளிலிருந்து கூட பலர் வருகை புரிவார்கள். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பியுமான ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments