Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு.. இறந்தவர்களில் ஒருவர் தமிழர் என தகவல்..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:02 IST)
பஞ்சாப் ராணுவ முகாமில் நேற்று துப்பாக்கி சூடு நடந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் நான்கு வீரர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பஞ்சாப் போலீசார் மற்றும் ராணுவ போலீசார் விசாரணை நடத்தியதில் துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருவதாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டில் சாகர் பன்னே, 25, கமலேஷ், 24, யோகேஷ் குமார், 24, சந்தோஷ் நாகரால், 25 ஆகிய நான்கு பேர்கள் என தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில் கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

 பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் தமிழர் என்ற செய்தி தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments