Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:10 IST)
புதுச்சேரியில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் என்ற பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை காண்பதற்காக தமிழகத்திலிருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நடைபெற உள்ளதால் இன்று புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments