Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரசாந்த் கிஷோர்! – அரசியல் வியூகம் ஆரம்பம்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (13:33 IST)
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் திமுக இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான அரசியல் வியூகங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் தேர்தல் நிலவரங்களை கணிப்பதிலும், அரசியல் வியூகங்கள் அமைப்பதிலும் முன்னனியில் இருப்பது அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் “ஐ பேக்” நிறுவனம். 2014 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பீகார், ஆந்திரா சட்டசபை தேர்தல்களிலும் பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்து கொடுத்த கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

இந்நிலையில் தமிழக கட்சிகள் பல பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற திட்டமிட்டு வந்தன. சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூக பணிகளை வகுத்து கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் அதிலிருந்து வெளியேறினார். இதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும் தமிழகத்தில் பாஜகவை பிரபலப்படுத்த பிரசாந்த் கிஷோரை தமிழக பாஜக அணுக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினோடு பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுக வெற்றி பெறவும், மேலும் கள நிலவரங்களை கணக்கில் கொண்டு சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை திமுகவிற்கு அமைத்து கொடுப்பதற்காகவும் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments